×

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

பொன்னமராவதி, பிப். 11: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் மற்றும் தேவையான உதவி உபகரணங்கள் அலிம்கோ நிறுவனம் மூலம் வழங்குவதற்கு சிறப்பு மதிப்பீடு முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் தலைமை வகித்தார். தனி தாசில்தார் சங்கரகாமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

டாக்டர் சுப்புசிவராஜ், சரவணன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அளவீடு மற்றும் மதிப்பீடு செய்து அலிம்கோ கான்பூர் நிறுவனம் மூலம் உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்தனர். முடநீக்கு வல்லுனர் ஜெகன்முருகன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றனர். இதில் வருவாய் ஆய்வாளர் ஜோதி, விஏஓ.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Camp ,
× RELATED கோவில்பட்டி பள்ளியில் மாநில கபடி பயிற்சி முகாம்