×

வெள்ளியணை அருகே வேன் மோதி தொழிலாளி பலி

கரூர், பிப்.12: கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த பள்ளசங்கனூரை சேர்ந்தவர் மகாமுனி(45). கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை, பச்சப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ குடித்து விட்டு கரூர் பாளையம் சாலையை கடக்க முயன்றார். அப்போது, கரூரில் இருந்து பாளையம் நோக்கிச் சென்ற வேன், மகாமுனி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : silver mine ,
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது