×

வாகன சோதனையின் போது போலீஸ்காரர்களை தாக்கிய 2 பேருக்கு வலை

நாகை,பிப்.12: நாகையில் பணியில் இருந்த காவலர்களை தாக்கி தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் வெளிப்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் 3 காவலர்கள் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தினர்.

அப்போது அவர்கள் வாகனத்தை நிறுத்தி போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தனர். மேலும் அவர்களின் சீருடையை பிடித்து இழுந்து கொலை செய்வதாக மிரட்டி விட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகிறார்.

Tags : policemen ,vehicle test ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்