×

எஸ்டிபிஐ கட்சி சார்பில் நிரவியில் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்

காரைக்கால், பிப்.12:காரைக்கால் எஸ்டிபிஐ கட்சி சார்பில், காரைக்கால் நிரவியில் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு, நிரவி-திருமலைராயன்பட்டினம் தொகுதி தலைவர் சுல்தான் கெவுஸ் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் ஹாஜா நஜ்முதீன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் முகமது பிலால் மற்றும் நிர்வாகிகள் அப்துல் சலாம், பதுருதீன், சிராஜ், மஸ்தான் மரைக்காயர் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நவாஸ்கான், புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தமீம் கனி, எஸ்டிபிஐ கட்சி மாநில பேச்சாளர் இமாம் ஹஸ்ஸான் பைஜி ஆகியோர் கலந்து கொண்டு ேபசினர். மேலும், மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தப்பட்டது. முடிவில் நிரவி-திருமலைராயன்பட்டினம் தொகுதி செயற்குழு உறுப்பினர் ஆஷிக் நன்றி கூறினார்.

Tags : Citizenship Security Forum ,SDBI Party ,
× RELATED மதுரையில் நாளை எஸ்டிபிஐ கட்சி...