×

4ஜி சேவையை உடனே தொடங்க கேட்டு பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், பிப்.12: பிஎஸ்என்எல் 4 ஜி சேவைகளை உடனே தொடங்க வேண்டும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதங்களின் ஊதிய விகிதத்தை உடனே வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக அந்தந்த அமைப்புகளுக்கு செலுத்திட வேண்டும். பிஎஸ்என்எல் கடன் பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். விஆர்எஸ் அமலாக்கப்பட்டதன் காரணமாக ஊழியர்களை நிறுவனம் விருப்பம்போல் மாறுதல் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து சங்க கூட்டமைப்பு தலைவர் லட்சுமணபெருமாள் தலைமை வகித்தார். ஊழியர் சங்க நிர்வாகிகள் ராஜூ, ஆறுமுகம், ஜார்ஜ் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் ராஜேந்திரன், பரமசிவம், ஆறுமுகம், சுயம்புலிங்கம், மணிகண்டன், சின்னத்துரை, ஜிஜேந்திரன், ஞானமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : BSNL ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு