×

பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தையுடன் ரோட்டில் சுற்றிய வாலிபர்

திங்கள்சந்தை, பிப்.12:இரணியல்  அருகே உள்ள கண்டன்விளை மடவிளாகம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் வாலிபர் ஒருவர்  பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தையுடன் சுற்றி திரிந்தார். குழந்தை  தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தது. இதனால் அவர் குழந்தையை கடத்தி  வந்திருப்பதாக அவர் மீது சந்தேகமடைந்த ெபாதுமக்கள் இது குறித்து இரணியல்  ேபாலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை  பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்த விசாரித்தனர். விசாரணையில்,  அவர் தனது பெயர் அப்துல் ரசாக் என்றும், தனது சொந்த ஊர் திருவிதாங்கோடு.  சகோதரி வீடு மணவாளக்குறிச்சியில் உள்ளது. இந்த குழந்தை எனது குழந்தைதான்.  குழந்தையை சகோதரி வீட்டில் விட ெகாண்டு சென்றேன். அவர் வீட்டில் இல்லாததால்  திரும்பி வந்தேன் என கூறினார். அவர் கூறியபடி திருவிதாங்கோடு மற்றும்  மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள்  வந்து குழந்தை அவரது குழந்தைதான் என்பதை உறுதி செய்தனர்.

போலீசார்  நடத்திய தொடர் விசாரணையில், அப்துல் ரசாக்குக்கு தூத்துக்குடியை சேர்ந்த  பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தது முதல் கணவன் மனைவிக்கு  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கர்ப்பமான அவரது மனைவி  குழந்தை பெற்றதும் குழந்ைதயை கணவரிடம் விட்டுவிட்டு தாய் வீட்டுக்கு  சென்று விட்டார். இதனால் குழந்தையை எப்படி வளர்ப்பது என தெரியாமல்  அப்துல் ரசாக் தவித்து வந்துள்ளார். குழந்தையை பராமரிக்க சகோதரியிடம்  ஒப்படைக்கலாம் என நினைத்து கொண்டு சென்றவேளையில், தவறாக நினைத்து போலீசார்  பிடித்ததாக கூறினார். இந்நிலையில் நீண்ட நேரமாக உணவு இல்லாமல்  பச்சிளங்குழந்தை அழுதுக்கொண்டிருந்ததால் குழந்தையின் உடல்நிலை  பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.

Tags : baby girl ,road ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை