×

திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை

மார்த்தாண்டம், பிப். 12:  மார்த்தாண்டம்  அருகே புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மார்த்தாண்டம்  அருகே காரவிளை பகுதியை சேர்ந்தவர் வினிஷ்(33). இவருக்கும், திங்கள்நகர்  பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம்  நடந்துள்ளது. வரும் 20ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்காக  அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று வெகுநேரமாகியும் வினிஷின்  அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டி  அழைத்தும் உள்ளே எந்தவித சலனமும் இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள்  கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வினிஷ் மின்விசிறியில் தூக்குபோட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதையடுத்து அறையில் சோதனை செய்து  பார்க்கப்பட்டது. அப்போது பேப்பரில் சில ெதாலைபேசி எண்களை எழுதி  வைத்திருந்தார். எதற்காக தொலைபேசி எண்களை எழுதி வைத்துள்ளார்? என்பது  தெரியவில்லை. இந்த தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதைத்  தொடர்ந்து உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள  நிலையில் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த  பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : newlyweds ,suicide ,wedding ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...