×

பொதுமக்களை அச்சுறுத்தும் கும்பல் ஆலுவிளை மக்கள் எஸ்.பி.யிடம் புகார்

நாகர்கோவில், பிப்.12 :  இரணியல் அருகே ஆலுவிளை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், நேற்று எஸ்.பி.யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஆலுவிளை ஊரில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இந்த பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் உண்டாக்கும் வகையில் சிலர், விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டுவதும், அவ்வப்போது காவல் நிலையத்துக்கு பொய் புகார்கள் அனுப்பி மக்களின் அமைதியை சீர்குலைத்தும் வருகின்றனர்.

இது தொடர்பாக பலமுறை இரணியல் காவல் நிலையம் மற்றும் குளச்சல் துணை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் தெரிவித்து  உள்ளோம். காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் அழைத்து எச்சரித்துள்ளனர். ஆனாலும் இன்னும் அந்த பிரச்னை தீரவில்லை. பொதுமக்கள் அமைதியை இழந்து வாழ்ந்து வருகிறார்கள். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி, தீர்வு காண வேண்டும் என கூறி உள்ளனர்.

Tags : public ,SP ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...