×

சுசீந்திரம் கோயிலில் ரூ10 லட்சம் உண்டியல் காணிக்கை

சுசீந்திரம், பிப்.12: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் 2 மாதத்திற்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்னவேல் பாண்டியன், முதுநிலை கணக்கு அலுவலர் இங்கர்சால், ஆய்வாளர் சாரதா, கண்காணிப்பாளர் தங்கம், கோயில் மேலாளர் சண்முகம் பிள்ளை ஆகியோர் முன்னிலையில் 11 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.

காணிக்கை எண்ணும் பயணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியல் வருவாயாக ரூ10 லட்சத்து 32 ஆயிரத்து 451 வசூலானது, மேலும் 40 கிராம் தங்கம், 22 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு ரூபாய்களும் கிடைத்தது.

Tags : Susindram Temple ,
× RELATED சுசீந்திரம் கோயில் தேர்களுக்கு...