×

ஜெப வீடு கட்ட அனுமதி கோரி கலெக்டரிடம் கிறிஸ்தவர்கள் மனு

திருப்பூர், பிப்.12:திருப்பூர், வெங்கடேஸ்வர நகரில் ஜெப வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க கோரி கலெக்டரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். திருப்பூர் கணக்கம்பாளையம் அடுத்த வெங்கடேஸ்வர நகர் பகுதியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக எங்களது வீட்டில்  ஜெப வழிபாடு நடத்தி வருகிறோம். இந்நிலையில், கடந்த வெள்ளிகிழமை காலை 9மணி முதல் 11 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை நாளிலும் பிரார்த்தனை செய்து வருகிறோம். இங்கு, ஜெப வீடு கட்டுவதற்கு அனுமதி கோரி பல முறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு பிரார்த்தனை செய்ய ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags : Christians ,Collector ,house ,
× RELATED பல ஆண்டுகளாக தொடரும் இருதரப்பு...