குன்னூர், பிப்.12: குன்னூர் எட்டாவது வார்டு பகுதிக்குட்ட பட்டது உழவர் சந்தை பகுதி. இந்த பகுதியில் நாள்தோறும் சமவெளி பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளை இங்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக இந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அடையாளம் தெரியாத வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள் அனைத்தும் புதர் முண்டி கேட்பாறின்றி காணப்படுகிறது. அந்த பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக உள்ள இடங்களில் தற்போது புதர்கள் முளைத்து காணப்படுவதால் பாம்பு, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி போன்ற ஆபத்தான விலங்குகள் சர்வசாதாரணமாக உலா வருகிறது. இது குறித்து பல முறை நகராட்சிக்கு அந்த பகுதி மக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அங்குள்ள வாகனங்களில் புதர்கள் காணப்படுவதால் வன விலங்குகளின் கூடாரமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் நடந்து செல்லவும் அதிகாலை நேரங்களில் காய்கறிகளை இறக்கவும் அச்சமடைந்துள்ளனர். எனவே உழவர் சந்தை பகுதியில் உள்ள புதர்களையும் அடையாளம் தெரியாத வாகனங்களையும் விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.