×

அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, பிப். 12:   ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் நடத்தும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடப்பாண்டுக்கான 21வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் சேரலாம்.

பயிற்சியில் சேருவதற்கான கல்வித் தகுதி 11ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. மார்ச் 6ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 6ம் தேதி மாலை 5.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு-சித்தோடு சாலை, கொங்கம்பாளையம் பிரிவில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு