×

புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் மின் கம்பத்தில் அரிக்கேன் விளக்கு ஏற்ற முடிவு

சத்தியமங்கலம், பிப். 12:  புஞ்சைபுளியம்பட்டியில் இ.கம்யூ. கிளை அமைப்பு கூட்டம் ஜீவானந்தம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 15வது வார்டு கிளையின் செயலாளராக வரதராஜ், துணை செயலாளராக பெருமாள்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன் கலந்துகொண்டு பேசினார். புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் உள்ள ஜவகர் இணை தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இத்தெருவில் பல ஆண்டுகளாக மின்கம்பங்களில் தெருவிளக்கு பொருத்தவில்லை.

இது குறித்துநகராட்சியில் பலமுறை முறையிட்டும் பலனில்லை. இத்தெருவினையொட்டி புளியம்பட்டி வாரச்சந்தை அமைந்துள்ளதால், பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே மக்களின் சிரமத்தை நகராட்சிக்கு உணர்த்தும் வகையில் 15வது வார்டு ஜவகர் இணை தெருவிலுள்ள மின்கம்பங்களில் வருகின்ற 16ம் தேதி மாலை 7 மணியளவில் அரிக்கேன் விளக்கு ஏற்றுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags :
× RELATED ஈரோடு மாவட்டத்தில் தென்னை மரத்தில்...