×

பாலியல் தொழில் நடத்திய விடுதி உரிமையாளர் கைது: 6 இளம்பெண்கள் மீட்பு

சென்னை: பாலியல் தொழிலில் ஈடுபட்ட தனியார் விடுதி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வடமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ஐஸ்அவுஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாலியல் தொழில் நடத்தி வந்த விடுதி உரிமையாளர் தமீம் அன்சாரி (54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 வடமாநில பெண்கள் உட்பட 6 இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், 6 இளம்பெண்களையும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தமீம் அன்சாரியை நீதிமன்ற உத்தவுப்படி சிறையில் அடைத்தனர்.

Tags : teenagers ,hostel owner ,
× RELATED இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை...