×

திருத்தணி அருகே பள்ளத்தில் பைக் கவிழ்ந்து கட்டிட மேஸ்திரி பலி

திருத்தணி, பிப். 12: திருத்தணி நகரம் 21வது வார்டு பாப்பிரெட்டி பள்ளியில் வசிப்பவர் நரசிம்மன். இவரது மகன் கோபி (35). கட்டிட மேஸ்திரி. இவர் தனது மனைவி பார்வதியை பைக்கில்  ஏற்றிக்கொண்டு புச்சிரெட்டிபள்ளி கிராமத்திற்கு தெக்கலூர் அருகே ஏரிக்கரையோர சாலை வழியாக நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த பைக் பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில்,  பலத்த காயமடைந்த கோபி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது மனைவி பார்வதி லேசான காயத்துடன் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் விரைந்து வந்து, கோபியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான கோபிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மற்றொரு சம்பவம்:

அரக்கோணம் வட்டம் நந்தேடுதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி (38). இவர், நேற்று முன்தினம் இரவு  திருத்தணி கன்னிகாபுரம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சாமந்திபுரம் கிராமத்தில் உள்ள சாலையோர மரத்தில் பைக் எதிர்பாராமல் மோதியது.  இதில், பலத்த காயம்  அடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி  அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில்,  ஏற்கனவே பிச்சாண்டி இறந்துவிட்டது தெரிந்தது.  இதுகுறித்து திருத்தணி  இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : ditch ,Thiruthani ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...