×

கொரோனா வைரஸ் எதிரொலி சீன பயணிகளின் வருகை குறைவு

மாமல்லபுரம், பிப். 12: மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை உள்பட பல்வேறு சிற்பங்களை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள், அவற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில், சீன நாட்டில் கொரோனா வைரஸ் நோய் உருவாகி பலர் இறந்துள்ளனர். இதனால், மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மாமல்லபுரத்துக்கு சீன பயணிகள் சுற்றுலா வருகின்றனரா என தமிழக சுகாதாரத் துறை கண்காணித்து சுற்றுலா பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Chinese ,travelers ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...