×

ராஜபாளையத்தில் திட்டப்பணிகள் தாமதம் தமிழக அரசைக் கண்டித்து நாளை திமுக உண்ணாவிரதம்

ராஜபாளையம், பிப். 11: ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜபாளையத்தில் நிறுத்தப்பட்டுள்ள தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் ரயில்வே மேம்பாலப் பணிகளை உடனே தொடங்கக் கோரியும், கடந்த 2018 ஜூன் 12ல் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின்போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, இதுநாள்வரை நடைமுறைக்கு கொண்டுவராமல் இருக்கும் புதிய பஸ் நிலையத்திலிருந்து தென்காசி ரோடு இணைப்புச் சாலைப்பணியை உடனே தொடங்குதல் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில், ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நாளை (பிப்.12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடக்க உள்ளது. இதில், திமுக நிர்வாகிகள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், வியாபாரிகள், வியாபார சங்கங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், ராஜபாளையம் தொகுதி வளர்ச்சியின் நலம் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Protests ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...