×

விபத்தில் பலியான பெண் உடல் விமானத்தில் அரியானா சென்றது

மதுரை, பிப்.11: மதுரை அருகே நடந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்ணின் உடல் விமானத்தில் அரியானா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கடந்த 8ம் தேதி சுற்றுலா வந்த வேன் மீது, தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் சென்ற, அரியானாவை சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்குப்பின், மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து வேனில், உறவினர் ஜெயின்சிங் ஏற்பாட்டில் அரியானா கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்னாதேவி(62) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது உடலை விமானத்தில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக இவரது உடல் நேற்று முன்தினமே, பிரேத பரிசோதனை முடித்து, உடல் பதப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.20 மணி அளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ரத்னாதேவியின் உடல் அனுப்பப்பட்டது.

Tags : victim ,Haryana ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...