×

லண்டன் வேலை ஆசைகாட்டி பல லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட இளைஞர்கள் எஸ்பியிடம் புகார்

திண்டுக்கல், பிப். 11: லண்டனில் வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி பல லட்சம் சுருட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட இளைஞர்கள் எஸ்பியிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று வந்த சிலர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பி சக்திவேலுவிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘நிலக்கோட்டை தாலுகா சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் முத்து முகமது. இவர் சென்னையில் அலுவலகம் வைத்திருப்பதாகவும், பல பேர்களை வேலைக்கு வெளிநாடு அனுப்பியுள்ளதாகவும் கூறி ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்தி படித்த இளைஞர்களிடம் பல லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார். ஜெயபிரகாஷ் - திண்டுக்கல், அருண் - கன்னியாகுமரி, ஜாக்சன் - கன்னியாகுமரி, பரக்கத்துல்லாஹ் - சித்தையன்கோட்டை, பூபேஷ் - கோயம்புத்தூர் ஆகியோரிடமிருந்து லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடம் தலா ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் பெற்றார். ஆனால் பல ஆண்டுகளாகியும் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. எங்கள் வீட்டு நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் பணம் கொடுத்தோம். பணம் கிடைக்காவிட்டால் நாங்கள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை. எனவே பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags : Millions ,teenagers ,SP ,London ,
× RELATED உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்