×

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி செய்யாறு-காஞ்சிபுரம் வழித்தடத்தில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரம்


செய்யாறு, பிப்.11: செய்யாறு- காஞ்சிபுரம் வழித்தடத்தில் சாலை புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு- காஞ்சிபுரம் சாலையில் புளியரம்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சிமென்ட் சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த 10 மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.இந்நிலையில் கடந்த 7ம் தேதி பணிகள் ஆங்காங்கே சிறு சிறு குறைபாடுகள் உள்ளதாக தினகரனில் படத்துடன் செய்தி விரிவாக வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சிமென்ட் சாலைக்கும் புதிதாக அமைக்கப்பட்ட சிறு பாலத்திற்கும் இடையில் உள்ள இணைப்புச்சாலையை அமைக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். செய்யாறு-காஞ்சிபுரம் வழித்தடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையினை ஒட்டி சிறு பாலத்திற்கு இடையே இணைப்புச்சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Tags : Roads ,road ,Kanchipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...