×

மக்காச்சோள பயிருக்கு இழப்பீட்டு தொகை எட்டயபுரம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி, பிப்.11: மக்காச்சோள பயிருக்கு இழப்பீட்டு தொகையை பெற்றுத்தரவேண்டுமென எட்டயபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் எட்டயபுரம் தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மேல ஈரால் பகுதி மானாவாரி விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: எட்டயபுரம் அருகேயுள்ள மேலஈரால் பகுதியில் வாழ்ந்துவரும் நாங்கள் எங்களுக்கு சொந்தமான மானாவாரி நிலங்களில் கடந்த 2018-19ம் ஆண்டில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்திருந்தோம்.கடும் வறட்சியால் நாங்கள் சாகுபடி செய்திருந்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் சேதமாகி விட்டன. இதற்கிடையே எங்களது மக்காச்சோள பயிருக்கு கீழஈராலிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறையாக பயிர்காப்பீட்டு தொகையும் செலுத்தி இருந்தோம். இருந்தபோதும் புள்ளியியல் துறை, வேளாண்மைத்துறையினரின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் எங்களுக்கு இன்னும் ஈழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்துவரும் எங்களுக்கான இழப்பீட்டு தொகையை தாமதமின்றி பெற்றுக்கொடுத்திடவேண்டும், பயிர் சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகளை அதற்குரிய துறையினர் சரியான முறையில் விவசாயிகளை அழைத்துசென்று எடுத்திடுவதற்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்திடவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.



Tags :
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்