×

பாப்பிரெட்டிப்பட்டியில் நல திட்ட உதவி வழங்கும் விழா

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.11: பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், 680 பயனாளிகளுக்கு ₹2.48 கோடிப்பீட்டில் நல திட்ட உதவி வழங்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் திட்டம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு, 680 பயனாளிகளுக்கு ₹2.48 கோடிப்பீட்டில் நல திட்ட உதவி வழங்கி, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, அரூர் ஆர்டிஓ பிரதாப், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் இளஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம், அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன் மற்றும் ராஜேந்திரன், தென்னரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Welfare Program Assistance Ceremony ,
× RELATED கொடைக்கானல் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா