×

சுகாதார பெண் பணியாளர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடி, பிப்.11: தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் சுகாதார பெண் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் உள் தர உத்திரவாத அமைப்பானது அன்னை பாரத் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து சுகாதார பெண் பணியாளர்களை மேம்படுத்துதல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சியில் பணிபுரியும் 40 சுகாதார பெண் பணியாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக அன்னை கேஸ் நிறுவனர் பொன்சிங் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேச்சாளர் சந்துரு வேல்முருகன் ஊக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியை சுதாகுமாரி செய்திருந்தார்.

Tags : health care workers ,
× RELATED கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்...