×

பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்

தஞ்சை, பிப். 11: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 360 மனுக்களை கலெக்டரிடம் பொது மக்கள் நேரில் அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் கோவிந்தராவ் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, சித்ரா நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் பணியின்போது இறந்ததால், அவருக்கு சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத் தொகை ரூ.1,59,155 க்கான காசோலையினை அவரது தந்தை அப்துல் ரெஜாக் என்பவரிடம் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.
பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...