வீரவநல்லூர், பிப். 11: சேரன்மகாதேவியில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.சேரன்மகாதேவியில் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்களின் அறிமுக கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகர செயலாளர் வக்கீல் பழனிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி பேசினார். கூட்டத்தில் பிப்.24ல் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவினை விமரிசையாக கொண்டாடுவது, புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளரை கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இதில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாசானம், அவைத்தலைவர் ஐசக் பாண்டியன், முன்னாள் கவுன்சிலர்கள் சௌந்தர்ராஜன், அனந்தப்பன், பேச்சிதுரை, கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், தொழிலதிபர்கள் மாரிச்செல்வம், உச்சிமாகாளி, முன்னாள் ஒன்றிய மாணவரணி செயலாளர் மகாராஜன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், சொர்ணமுடி பாண்டியன், மற்றும் வார்டு செயலாளர்கள், மகளிரணியினர், நகர கழகத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.