×

உடல் நலக்குறைவால் நெல்லை ஏட்டு மரணம்

நெல்லை, பிப். 11:  சேரன் மகாதேவியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (53). இவர், டவுன் போலீஸ் ஸ்டேஷனில்  ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த ஜன.13ம் தேதி பணியிலிருந்த போது ஹரிகிருஷ்ணன், உடல் நலக்குறைவால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.  தகவலறிந்து வந்த போலீஸ் கமிஷனர் தீபக் எம் தாமோர், துணை கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார், உதவி கமிஷனர்கள் பெரியசாமி, சதீஷ்குமார் மற்றும் போலீசார் ஹரிகிருஷ்ணன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சேரன்மாதேவிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று (11ம் தேதி) உடல் அடக்கம் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Paddy ,death ,
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...