×

ஜெயங்கொண்டம் பகுதியில் மனநலம் பாதித்த வாலிபர் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு

தா.பழூர், பிப்.11: அரியலூர் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் சுற்றி திரிகின்றனரா? என ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடைவீதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரனை மேற்கொண்டனர். இதில் அவர் உடையார்பாளையம் தெற்கு காலனி தெருவை சேர்ந்த செல்லையா மகன் விமல்ராஜ் (25) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் தமிழரசி அவரை மீட்டு விளாங்குடியில் உள்ள வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Jayankondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது