×

சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு மின்மோட்டார் வழங்கல்

சீர்காழி, பிப். 11:சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில், நவக்கிரகங்களில் ஒன்றான புதன் அகோரமூர்த்தி நடராஜர் உள்ளிட்ட சாமிகளின் சன்னதிகள் உள்ளன.
இந்த சன்னதிகளை சுத்தமாக பாரமரிக்க தண்ணீர் கொண்டு தூய்மை பணிகள் செய்யும் வகையில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மின்மோட்டர் பொருத்திய இயந்திரத்தை கோயில் அர்ச்சகர் சேனாதிபதிசிவாச்சாரியார் உபயமாக வழங்கியுள்ளார். கோயில் நிர்வாகத்தினர் பக்தர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...