×

தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளில் நடவு பணி நிறைவு

ஊட்டி, பிப். 11:  மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்கு 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி நிறைவடைந்தது.  ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடை சீசன் என்பதால், தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வது வழக்கம். அதேபோல், மலர் கண்காட்சி நடக்கும் மூன்று நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும். அதேபோல் மலர் கண்காட்சியில் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கார மேடைகளில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்வது மட்டுமின்றி, வண்ண வண்ண மலர் கூட்டங்கள் நடுவே புகைப்படங்கள் எடுத்துச் செல்வதும் வழக்கம். இந்நிலையில், மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தற்போது பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.   மேலும், 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, லில்லியம், பெட்டூனியா, ேடலியா, சால்வியா உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்தது. தற்போது நடவு பணிகள் முடிந்த நிலையில், நாற்றுக்களை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்னர்.
தற்போது குளங்களில் இருந்து தண்ணீர் எடுத்து செடிகளுக்கு பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் இந்த செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.  இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

Tags : botanical garden ,
× RELATED உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!