×

குடிசை வீடுகளில் தீ விபத்து

அந்தியூர், பிப்.11: ஆப்பக்கூடல் அருகே இரண்டு குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் ஓரிச்சேரி காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் பொடாரன் (39). கூலி தொழிலாளி. நேற்று யாரும் இல்லாத நேரத்தில் திடீெரன இவரது குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது பொடாரனின் பக்கத்து வீடான லட்சுமியம்மாள் (38) என்பவரது வீடும் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து உடனடியாக பவானி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருவீடுகளிலும் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் பொடாரன் வீட்டில் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : cottage houses ,
× RELATED சிலியில் ஏழைகள் வசிக்கும் காலனியில்...