×

குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்


ஈரோடு, பிப்.11: குடியிருப்புகளை காலி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளதையடுத்து கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பவானி அடுத்துள்ள ஜம்பை நல்லிபாளையம் சாலையில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக 19 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி செலுத்தி வரும் நிலையில் கடந்த 3ம் தேதி பவானி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பல ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய சொல்லும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவ்வாறு குடியிருப்புகளை காலி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாற்று இடம் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் நேற்று மனு அளித்தனர்.

Tags : residence ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...