×

எனது மரணத்திற்கு காரணம் விஏஓ ஆர்.ஐ. கணவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கில் தற்கொலை

தாராபுரம்.பிப்.11: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலூகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக வேலை செய்பவர் சுதா(35). இவரது கணவர் வேலுச்சாமி (40). டிரைவர். காதல் திருமணம் செய்துகொண்ட  இத்தம்பதிக்கு சுவேதா என்ற மகளும் அகில் என்ற மகனும் உள்ளனர்.சுதா திருமணத்திற்கு பின்னர் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இதையடுத்து தாராபுரம் விஏஓவாக பணியாற்றிய சுரேஷ் என்பவருக்கும் சுதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுதா தனது கணவராகிய வேலுச்சாமியை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று உப்புத்துறைபாளையம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வேலுச்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் வேலுச்சாமியின் சடலத்தை கைப்பற்றி சோதனையிட்டதில் அவரது சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் தனது தற்கொலைக்கு தாராபுரம் விஏஓ சுரேஷ் தான் காரணம் என எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தினர்.வேலுச்சாமியின் தற்கொலைக்கு காரணமான கிராம நிர்வாக அலுவலர் சுரேசை கைது செய்யாமல் வேலுச்சாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என அவரது உறவினர்கள் போலீசில் வாக்குவாதம் செய்தனர்.போலீசார் சுரேஷிடம் விசாரணை நடத்தியதோடு வேலுச்சாமியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரை கைது செய்தனர். வேலுச்சாமியின் மனைவி சுதா கணவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் தலைமறைவானார்.

Tags : death ,VAO R.I. ,suicide ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...