×

காங்கயம் அருகே அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு

காங்கயம்,பிப்.11: காங்கயம் அருகே வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   காங்கயம் அடுத்து ஊத்துக்குளி ரோட்டில் தொட்டிபாளையம் அருகே ஒரு பாலத்தின் பக்கவாட்டில் கீழே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் காங்கயம் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.இறந்தவருக்கு 30 முதல் 35 வயது இருக்கும். டி சர்ட்  மற்றும் சாட்ஸ் அணிந்துள்ள இவர் இறந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது.இவர் யார் எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags : Plaintiff ,state ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...