×

போலீசாருக்கு விரல் ரேகை பதிவு

நாகர்கோவில், பிப். 11: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவல்துறை தீயணைப்புத்துறை ஜெயில் வார்டன்கள் உள்பட சுமார் 8878 பேரை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பின்னர் உடல் திறன் தேர்வு நடந்தது. உடல்திறன் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமன ஆணை பெற்றனர்.

அந்த வகையில் குமரி மாவட்டத்திற்கு 59 பெண் போலீசார் மற்றும் 112 ஆண் போலீசார் உள்பட மொத்தம் 171 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு, கைரேகை பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று நாகர்கோவில் ஒழுகினசேரியிலுள்ள விரல் ரேகை பிரிவில் பெண் போலீசாருக்கான விரல்ரேகை பதிவு நடைபெற்றது. இது முடிந்தவுடன் இவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்