×

அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறம் மாறுகிறது குமரியில் 2 வழித்தடத்தில் சிவப்பு வண்ண பஸ் அறிமுகம்

நாகர்கோவில், பிப்.11:  குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் 2 வழித்தடங்களில் சிவப்பு வண்ண பஸ்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள டவுன் பஸ்கள் அனைத்தும் பொங்கல் பண்டிகை முதல் சிவப்பு வண்ணத்திற்கு மாற்றப்பட உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல்கட்டமாக சென்னையில் சிவப்பு வண்ணப் பூச்சு கொண்ட அரசு பஸ்களை மாநக போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்திருந்தது. சென்னையில் 245 சிவப்பு நிற பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அதை தொடர்ந்து தமிழகத்தில் பிற நகரங்களிலும் பஸ்கள் சிவப்பு நிறத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கரூர், பண்ருட்டி, குரோம்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இந்த சிறப்பு நிற பஸ்கள் கூண்டு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பின்னர் அவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. புதிய சிவப்பு வண்ண பஸ்களில் இரண்டுக்கு இரண்டு என்ற அடிப்படையில் நாரிழைகள் கொண்டு இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தானியங்கி கதவுகள், முன்புறம் மற்றும் பின்புறம் ஏறி, இறங்கும் வகையிலான தாழ்வான படிக்கட்டுகள் உள்ளிட்ட பல நவீன சிறப்பம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கும், நாகர்கோவிலில் இருந்து குளச்சல் வழியாக ரீத்தாபுரத்திற்கும் என்று இரண்டு சிவப்பு வண்ண பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வரும் நாட்களில் அனைத்து டவுன் பஸ்களும் சிவப்பு வண்ணத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Introduction ,lane ,Kumari 2 ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...