×

திருமணமாகாத விரக்தி ரேசன் கடை ஊழியர் தற்கொலை

திருச்சி, பிப். 7:திருச்சியில் திருமணமாகாத விரக்தியில் ரேஷன் கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி உய்யகொண்டான் திருமலை கொடாப்பு பகுதி நடுத்தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (43). ரேசன் கடையில் தற்காலிக எடையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கு பெண் கிடைக்காததால் விரக்தி அடைந்து கடந்த 31ம் தேதி எலிபேஸ்ட்டை சாப்பிட்டார். அவரை உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : ration shop ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை