×

பழிவாங்கும் போக்கை கைவிடக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப். 7:தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் தலைவர் காயத்ரி தேவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் செவிலியர்கள் முதல் டாக்டர்கள் வரை பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். சஸ்பெண்ட் செய்வதை நிறுத்த வேண்டும். வாடகை கட்டிடங்களில் இயங்கும் துணை சுகாதார நிலையங்களுக்கான நிலுவை வாடகையை உடனே வழங்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு திட்டத்திற்கு ஆள்பிடிக்க வற்புறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rural Health Nurses ,
× RELATED 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...