×

தி.பூண்டி வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

திருத்துறைப்பூண்டி, பிப். 7: திருத்துறைப்பூண்டி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. வட்டார வளமேற்பாவையாளர் சூசைரெத்தினம் முன்னிலை வகித்தார். சிறப்பு பயிற்றுனர் ஜானகிராமன் வரவேற்றார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் பேசினார். விழாவில் 20 மாற்று திறனாளி மாணவர்கள் சார்பில் அவர்களது பெற்றோர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள உதவி உபகரணங்கள் பெற்றுக்கொண்டனர். வட்டார சிறப்பு பயிற்றுனர்கள் ஆரோக்கிய விஜயராணி, ராஜலெட்சுமி ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள். விழாவில் வட்டார இயன்முறை பயிற்சியாளர் சந்திரமவுலீஸ்வரன், பெற்றோர்குழு தலைவர் ரெஜினாபேகம், பயிற்சியாளர்கள் செல்வி, ரஞ்சிதா மற்றும் பாதுகாவலர் ஜெயலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பு பயிற்றுனர் தேசிகாமணி நன்றி கூறினார்.

Tags : Dundee Regional Resource Center ,
× RELATED விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி பல்வேறு படிப்புகளில் சேர்ந்து