×

தி.பூண்டி விளக்குடி பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நாளில் மாணவர்களுக்கு பரிசுகள் நுகர்வோர் மைய தலைவர் வழங்கினார்

திருத்துறைப்பூண்டி, பிப். 7: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மகாத்மா காந்தி 150வது பிறந்த நாளையொட்டி சுகாதார விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் சுகாதாரத்தை நன்கு பின்பற்றிய முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜாராமன் தலைமை வகித்தார். நுகர்வேர் பாதுகாப்புமைய விளக்குடி கிளை செயலாளர் செல்வம் வரவேற்றார்.

மாவட்ட நுகர்வேர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.  இதில் ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி செல்வம், நுகர்வோர் பாதுகாப்பு மைய அமைப்பாளர் ஜெகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பாஸ்கரன், துணை தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : President ,Consumer Center ,Dundee Lighting School ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...