×

முதல் கூட்டத்தில் தலைவர் உறுதி பதவி உயர்வு வழங்ககோரி இடைநிலை ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப். 7: பதவி உயர்வு வழங்கிட கோரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகாலமாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும். தேசிய கல்வி கொள்கையினை திரும்பப்பெற வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மதன காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Teachers Association ,meeting ,
× RELATED மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான...