×

கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை முடிக்க வலியுறுத்தல்

ராசிபுரம், பிப்.7: ராசிபுரம் அருகே காக்காவேரி பகுதியில் கிடப்பில் போட்டப்பட்ட சாலை பணியால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராசிபுரம் அருகே காக்காவேரி பகுதியிலிருந்து, பூசாரிபாளையம் செல்லும் தார்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்க, பழைய சாலைகள் பறிக்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கற்க்கள் கொட்டப்பட்டது. ஆனால், பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில், இந்த சாலையில் செல்லும் சிலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : completion ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா