×

தாலுகா அளவில் ரேஷன்கடை நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்

தர்மபுரி, பிப்.7: தர்மபுரி மாவட்டத்தில் தாலுகா அளவில் ரேஷன்கடை நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (8ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், நடத்தப்படும் பொது வினியோக திட்ட ரேஷன் கடைகளில் நுகர்வோருக்கு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும் தாலுகா அளவில் குறைதீர்க்கும் முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. இம்மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம், நாளை (8ம் தேதி) காலை 10 மணிக்கு அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது.

தர்மபுரி தாலுகாவில் கீழ் எட்டிமரத்துப்பட்டியிலும், பென்னாகரம் தாலுகாவில் தட்டாரப்பட்டியிலும், பாலக்கோடு தாலுகாவில் சீங்கேரியிலும், அரூர் தாலுகாவில் கம்மாளப்பட்டியிலும், பாப்பிரெட்டிபட்டி தாலுகாவில் பையர் நத்தத்திலும், நல்லம்பள்ளி தாலுகாவில் உதமன் கொட்டாயிலும், காரிமங்கலம் தாலுகாவில் பள்ளத்தூரிலும் உள்ள ரேஷன் கடைகளில் குறைதீர்க்கும் முகாம்கள் நடக்க உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பொது விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை மனுக்களாக தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rashankadai Consumer Grievance Redressal Camp ,Taluk ,
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...