×

இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.7:  பாப்பிரெட்டிப்பட்டி அருகே, இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா(45), அரசு பள்ளியில் ஆசிரியரான இவரது மனைவி சத்யா(35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சத்யாவின் தாத்தா வீட்டில் இருந்து பணம், நகை வாங்கி வரும்படி இளையராஜா டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினமும், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதனிடையே, சத்யாவை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவன் நாடகமாடுவதாக, சத்யாவின் தாய்மாமன் தமிழ்ச்செல்வன்,  பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். மேலும், பிரேத பரிசோதனை செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கூறி, அவரது உறவினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் பவுலேஸ், அதற்கான வசதிகள் இந்த மருத்துவமனையில் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யும்படி உறவினர்கள் கூறினர். இதை தொடர்ந்து, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சத்யாவின் உடலை போலீசார்  அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Relatives ,state hospital ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...