×

நான்கு ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப். 7: மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கல்வி தலைவர் ராமன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் சோமு வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலமுருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும். அரசு உயர், மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வை கலந்தாய்வு நடத்தி வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாநிலத்தலைவர் அப்பாத்துரை சிறப்புரையாற்றினார். இதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், நீதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்