×

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டை தயார்

திருப்பூர், பிப்.7: திருப்பூர் மாவட்டத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பிரெய்லி முறையிலான வாக்காளர் அடையாள அட்டைகள் நேற்று வந்தடைந்துள்ளது.கண்பார்வையற்ற, கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதில் தேர்தல்களை சந்திக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர்களின் பெயர், விவரங்கள், சரியாக உள்ளனவா என்பதை அவர்களே சரிபார்த்துக்கொள்ளும் வகையில் ‘பிரெய்ல்’ முறையில் வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. அவற்றை மாவட்டம் தோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட  கண்பார்வையற்ற மற்றும் கண்பார்வை குறைபாடு உடைய 905 மாற்றுத்திறனாளிகளுக்கு, முதல்கட்டமாக வாக்காளர் அடையாள அட்டைகள் வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...