×

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரம், பிப்.7: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாராபுரம் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தார். இதில், மக்களுக்கு பயன்தராத பட்ஜெட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. இதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரகுபதி, மாவட்ட குழு உறுப்பினர் தருமன், மலையாண்டி, கருப்புசாமி, அலங்கியம் ஊராட்சி கவுன்சிலர் பூங்கொடி, மயிலாத்தாள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவிநாசி:மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து அவிநாசி புதிய பஸ் நிலையத்தின் முன்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் இசாக் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச்செயலாளர் கோபால், மாவட்டக்குழு வி.கே.சுப்பிரமணி, மோகன், செல்வராஜ், ராஜம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இறுதியில், மாவட்ட பொருளாளர் நடராஜன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்.

Tags : Communists ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள்...