×

பள்ளி பரிமாற்றம் திட்டத்தில் மாணவர்கள் கலை நிகழ்ச்சி

பந்தலூர், பிப். 7:  பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர் நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றம் திட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு சகோதரத்துவம், நட்புணர்வு, பள்ளிகளுக்கிடையே புரிந்துணர்வு, பள்ளி வளங்களை பயன்படுத்துதல் போன்றவை பற்றி விளக்கப்பட்டது. மேலும் பள்ளி பரிமாற்றம் திட்டத்திற்காக வந்த ராக்வுட் பேரல் பிரிவு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களை எழுதுகோல் மற்றும் இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் வரவேற்றனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை (பொ) புளோரா குலோரி தலைமை வகித்தார். ஆசிரியர் மணிவாசகம் வரவேற்றார். மாணவர்களுக்கு பல்வேறு திறன் போட்டிகள், கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் செல்வநாயகம், முகமது பஜீலுகான், மார்கிரேட்மேரி, கல்யாணி, தேவி, விக்னேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் களப்பயிற்சி சென்றனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...