×

ஆங்கிலம் கற்றலை மேம்படுத்த அரசு ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஈரோடு, பிப்.7: ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்த ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம் காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை உதவி திட்ட இயக்குநர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். இதில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் ஆங்கில பாடத்தை கற்றல் மற்றும் கற்பித்தலில் உள்ள குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை மாநில அளவில் கருத்தாளர்களாக பயிற்சி பெற்றவர்கள் மூலம் அளிக்கப்பட்டது. இதில், ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி, சத்தி ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : government teachers ,
× RELATED ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன்...