×

இங்கிலாந்து, ஓமனில் பணியாற்ற கோவையில் நாளை சிறப்பு முகாம்

ஈரோடு, பிப்.7:ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இங்கிலாந்து நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர் மற்றும் நர்ஸ் போன்ற பணியாளர்களை பணியமர்த்தும் பொருட்டு வேலைவாய்ப்பு அளிக்க நேசனல் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னணி தனியார் நிறுவனத்தில் பணியாற்ற எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல் டெக்னீசியன், லைன்மேன் ஆகிய பணியிடங்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான பதிவு முகாம் 8ம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர், கோவையில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் பதிவு செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம். மேலும், காலிப்பணியிடம் மற்றும் பதிவு கட்டணம் குறித்த விபரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.com மூலமாகவும் மற்றும் 044 22505886, 22502267 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி 0424 2275860 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Tags : camp ,England ,Oman ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு