×

சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியவர் கைது

சங்கரன்கோவில், பிப்.7:  சங்கரன்கோவில் அருகேயுள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சுப்புராஜ்(23). இவர் 18 வயதுள்ள இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிய பழகியதில் கர்ப்பமானார். அவர் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் சுப்புராஜ் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததுடன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புராஜை கைது செய்தனர்.

Tags : Sankarankoil ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...